தமிழக பசுவினங்கள் எனும் இந்த இணையம் பிரதேச வாரியாக காணப்படும் நாட்டுபசுக்களை அவைகாணப்படும் பகுதியிலேயே காக்கும் பொருட்டும், இதுவரை ஆவணம் செய்யப்படாத பசுக்களை வெளிக்கொணரவும் ஆகும். Tamilnadu cattle Breeds: The objective of this site is to introduce the regional breeds and emphasise the necessity to conserve them only in their respective regions and not to spread them all along for exploitation. It also brings the undocumented breeds to limelight.
"கொங்கப்பசுவினமானது மான் போன்றது. ஆதி பசுவினமாகும். ஒரு காளை மற்றும் இரு கிடாரிகளை 1962 இல் கொண்டுவந்தோம். மாட்டுக்கறிக்காக முதலில் கொண்டுவந்தோம். இப்பொழுது இவற்றின் மரபைக்காக்க விருத்தி செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் எங்களிடம் உள்ளன."
இவனது பீடை பிடித்த சீமை மாட்டை வளர்க்காமல், நமது கொங்கனை தனது வருங்கால சந்ததிக்காக வளர்க்கிறான் என்றால் நாம் புரிந்துகொள்ள வேண்டாமா?
ஆச்சரியமல்ல, உண்மை. ஆப்பிரிக்காவில் நாட்டு மாடுகளை வாழ்க்கை முறையாகக் கடைபிடிக்கும் முண்டாரி, டிங்கா பழங்குடியினர். பண்டைய பாசுபத சைவ வாழ்க்கைமுறை ஆப்பிரிக்காவில்தான் உயிர்ப்புடன் உள்ளது.
வழக்கங்கள்:
1. உடல் முழுதும் திருநீறு பூசல் (மாடுகளுக்கும்)
2. கோமூத்திரக் குளியல்
3. நேராக மடியில் பாலறுந்தல்
4. பசுக்களை தடவல்
5. ஆநிரை காத்தல், போரில் மீட்டல்
6. பரிய(ச)ம், வரதட்சனையாக பசுக்களைக் கொடுத்தல்
7. பசுக்களையே செல்வமாக மதித்தல்
8. மாட்டுக்கறி தவிர்த்தல்
9. மாட்டை சுற்றி வாழ்தல்
10. பாலுணவை மட்டும் உண்ணல்
11. திருநீற்றை ஆடையாக அணிதல்
அப்படி பாசுபத சிவநேயச்செல்வர்கள் இன்னும் உலகில்...
عليكم بألبان البقر و سمنانها ، و إياكم و لحومها ، فإن ألبانها و سمنانها دواء و شفاء ، و لحومها داء ...
நாட்டுப்பசுவின் (Bos indicus) பாலில் உள்ளது குணப்படுத்துதல் தத்துவம், அதன் நெய் ஒரு மருந்து, மற்றும் அதன் இறைச்சி நோயை உண்டாக்கும் (இய்யாகம்) ஜாக்கிரதை - முகமது நபி Al-Mustadrak 'ala al-Sahihayn: المستدرك على الصحيحين) or Mustadrak Al Hakim: مستدرك الحاكم)
நபி காலத்தில் (622 - 612 CE), அரபு தீபகற்பத்தில் பாரம்பரியமாக இந்திய வம்சாவளியான உழைப்பதற்காகக் கொண்டுசெல்லப்பட்ட நாட்டுப்பசு (Bos indicus) வகை ஜனோபி, ஹசாவி என்ற இரு திமில் உள்ள பசு இனங்கள் உள்ளன:
இவை (Bos indicus) மூஸா நபி காலத்தில் (1400 - 1300 BCE) (மோசே, Moses) யூத, சமேரிய தவ்ராத்தில் (தோராஹ் - பழைய ஏற்பாடு):https://www.stepbible.org/?q=version=SPE@reference=Num.19 ஆகியவற்றில் சொல்லப்படவில்லை. மாறாக Bos taurus என்ற திமில் அற்ற சிகப்பு இன சீமைமாடுகளே சொல்லப்பட்டுள்ளன.
3 அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. 4 அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன். 5 பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். 6 அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்புநூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன். 7 பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 8 அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 9 சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டி வைக்கக்கடவன், அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்துவைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும். 10 கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக. 11 செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். 12 அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான். 13 செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும். 14 கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள். 15 மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும். 16 வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். 17 ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும். 18 சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன். 19 சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான். 20 தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான். 21 தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத்தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 22 தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்."
336-323 BCEஇல் மூசா நபிக்குப் பின்தான் சிக்கந்தர் ஆகிய அலெக்ஸாந்தரால்தான் (ஆர்ரியானின் அனபாஸிஸ்) இந்தியாவில் இருந்து அரபு, ஆப்பிரிக்கப் பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டதான 2,30,000 Bos indicus நாட்டு மாடுகள்தான் குரானில் சுரா அல் பக்ராஹ் படி மூசா நபியால் வேலை செய்யக்கூடிய உழைக்கக்கூடியவை ஆதலால் கெட்ட மாமிசம் உடைய பசு இனங்கள் ஆதலால் உடலுக்கும், குர்பானிக்கும் உகந்தவை அல்ல என்று முகமது நபி மேலும் விளக்கம் அளிக்கிறார்:
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
“அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
“அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
“உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 2:70 )
அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
(அல்குர்ஆன் : 2:71 )
மற்றொரு வகையான திமில் இல்லா மஞ்சள் நிற சீமை மாடு (Bos taurus) வகையே சிறந்தது ஆகும் என்பதே கருத்து என்பது எனது ஆய்வு.
திமில் உள்ள ஜனோபி இன நாட்டுமாடுகள்
திமில் உள்ள ஹஸ்ஸாவி இன நாட்டுமாடுகள்
அமராத்தின் அல் ஃபுஜைராஹ் மரபு கிராமத்தில் அரபு நாட்டுமாட்டு கவலை ஏற்றல் இறைப்பு
ஷார்ஜா சந்தையில் நாட்டுமாடுகள்
நபிகள் பெருமைப்பட்ட தனது பூர்வீகமாகக் குறிப்பிட்டுள்ள ஏமனில் திமில் உள்ள நாட்டு மாட்டு உழவு
சூரத்தல் பாக்ராவின் படியான மூஸா நபியின் காலத்து மென்மையான குர்பானிக்கான மாமிசம் கொண்ட, வேலை செய்யாத, மண்ணின் நிறம் நிறமுடைய, திமில் (ஏர் பூட்ட தோதற்ற) இல்லாத Bos taurus அரபு, பாலஸ்தீன, இஸ்ரேல் பகுதிகளின் பூர்வீக அரபு இன சீமை மாட்டினம் (Bos taurus):